சென்னையில் புத்தாண்டு கொண்டாடிய 2 இளைஞர்கள் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் புத்தாண்டு கொண்டாடி விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் கார் மோதிஉயிரிழந்தனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் (23), ரமேஷ் (25). இவர்கள் இருவரும் கடந்ததிங்கட்கிழமை இரவு புத்தாண்டைக் கொண்டாடபெசன்ட் நகர் கடற்கரைக்கு பைக்கில் சென்றனர்.
கடற்கரையில் மகிழ்ச்சியாக புத்தாண்டைக் கொண்டாடி விட்டு இரவு 2 மணிக்கு மேல் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அடையாறு அருகே இவர்கள் வந்த பைக் மீது அம்பாசிடர் கார் ஒன்று மோதி விட்டு நிறுத்தாமல் சென்று விட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications