மேம்பால ஊழல்: தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டுகிறது சி.பி.சி.ஐ.டி.
சென்னை:
சென்னை அடையாறு மேம்பாலத்தில் கனரக வாகனத்தை ஓட்டி பார்த்து ஆய்வு செய்த போது பாலம் ஆடியதுஎன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜியான முகமது அலி கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகரில் 9 மேம்பாலங்கள் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இந்தபாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு சி.பி.சி.ஐ.டி. போலீசில்புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுசம்பந்தமாக போலீசார் 80க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அடையாறில் உள்ள மேம்பாலத்தில் தீயணைப்பு துறைக்கு சொந்தமான கனரக வாகனத்தை ஓட்டி மேம்பாலத்தின்தரத்தை முகமது அலி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில்கூறியதாவது:
அடையாறு பாலத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும் பாதை திருப்பத்தில் பஸ், கனரக வாகனங்கள் செல்லமுடியாது என்ற புகார் உள்ளது.
இதனால் அந்த பாதையில் தீயணைப்புக்கு சொந்தமான கனரக வாகனத்தை மேம்பாலத்தில் ஓட்டிப் பார்த்து ஆய்வுசெய்தோம்.
அந்த வாகனத்தால் திருவான்மியூர் திருப்பத்தில் திரும்ப முடியவில்லை. மேலும் பாலத்தின் மீது வாகனம்சென்றபோது பாலம் ஆடியது.
சென்னையில் உள்ள மற்ற மேம்பாலங்களின் தரத்தை கண்டறிவதற்காக தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளோம்என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications