For Daily Alerts
Just In
கோவையில் இருந்து காஷ்மீர் சென்ற 170 ராணுவ வீரர்கள்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரிலிருந்து 170 ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் காஷ்மீருக்கு ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்தியாவும்பாகிஸ்தானும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.
அதன்படி ஊட்டி அருகே உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ பயற்சி தளத்தில் இருந்து 170 ராணுவ வீரர்கள் 2டிரக்குகளில் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் பெட்டி படுக்கைகளும், துப்பாக்கிகளும் கொண்டுவந்து இறக்கப்பட்டன.
பின்னர் அந்த 170 வீரர்களும் கோயம்புத்தூரில் இருந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுசென்றனர்.
Comments
Story first published: Wednesday, January 2, 2002, 5:30 [IST]