கருணாநிதி - ராமதாஸ் திடீர் சந்திப்பு: இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாமக ஆதரவு
சென்னை:
வரும் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு பாமர ஆதரவு அளிக்கும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 21ம் தேதி வாணியம்பாடி, சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் ராமதாஸ். அவர்கள் இருவரும்சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு வெளிவந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்கூறியதாவது:
கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக வந்தேன்.
மேலும் கண்ணகி சிலை அகற்றியது, சிவகாமியின் கடத்தல், மற்றும் இடைத் தேர்தல் பற்றியும் நாங்கள் இருவரும்பேசினோம்.
வரும் இடைத் தேர்தலில் திமுகவை பாமக ஆதரிக்கிறது. திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மூன்றுதொகுதிகளிலும் அவர்கள் வெற்றி பெற பாமக கடுமையாக உழைக்கும் என்றார் ராமதாஸ்.
கருணாநிதியிடம் மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுமா என்று கேட்டதற்கு, அதை மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று கூறினார்.