இளங்கோவன் மீது வாசன் பாய்ச்சல்
சென்னை:
திரும்பத் திரும்ப காங்கிரசோடு இணையும்படி இளங்கோவன் அழைத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானஅரசியல் அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமாகாவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் இதுகுறித்து வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரசில் வந்து சேருமாறு அக்கட்சித் தலைவர் இளங்கோவன் தொடர்ந்து தமாகா தலைவர்களுக்குக் கடிதம்எழுதி வருகிறார்.
ஆனால் தமாகா தலைவர்களையோ தொண்டர்களையோ கட்சியிலிருந்து பிரிக்கவே முடியாது.
இப்படித் தொடர்ந்து காங்கிரஸ் கடிதங்கள் அனுப்பி தமாகாவினரைப் பிரிக்க நினைப்பது ஆரோக்கியமானஅரசியலுக்கு அழகல்ல. காங்கிரசில் தமாகா இணைவதற்கான வாய்ப்பே இல்லை.
இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைவர்களுடன் விரைவில் பேசி முடிவெடுக்கப்படும்.
ராஜ்ய சபாவில் எனது தந்தையின் மறைவால் காலியான இடம் எங்களுடையதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாகஅது எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை என்றார்வாசன்.












Click it and Unblock the Notifications