அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இரு பஸ் டிரைவர்கள் உட்பட 3 பேர்உயிரிழந்தனர்.
பண்ருட்டியில் இருந்து பாதூர் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ்ஸும், விருத்தாச்சலத்தில் இருந்து விழுப்புரம்நோக்கி வந்த அரசு பஸ்ஸஸும் வண்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மதியம் நேருக்கு நேர்மோதிக் கொண்டது.
இந்த சம்பவத்தில் டவுன் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். டவுன் பஸ்ஸில் பயணம் செய்த குப்பன்,மற்றொரு அரசு பஸ் டிரைவர் சுகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
டவுன் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் படு காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் விழுப்புரம், கடலூர் அரசுமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications