வால்பாறை அருகே மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாகஇறந்தது.
வால்பாறை அருகேயுள்ள சிங்கல்லார் காட்டுப் பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர்கள் சென்று கொண்டுள்ளன.இந்த வயர்கள் உள்ள பகுதியில் 20 யானைகள் புதன்கிழமை கடந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது ஒருகுட்டி யானை வயரைத் தொட்டுள்ளது. இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அங்கேயே யானைகருகி இறந்தது.
குட்டி யானை மின்சாரத்தால் தாக்கப்பட்டதை அறிந்த தாய் யானை, குட்டி யானையை காப்பாற்ற முயன்று அதைஇழுத்தது. அப்போது தாய் யானை தூக்கி வீசப்பட்டது. ஆனால் தாய் யானைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இறந்த குட்டியானைக்கு வயது 4 ஆகும். இறந்த குட்டி யானையின் உடல் அருகே யாரையும் நெருங்க விடவில்லைபிற யானைகள். அனைத்துயானைகளும் கண்களில் நீர் வழிய சோகமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தன.
சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications