தாஜ்மகாலை தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய ராமர் கோவிலையும், தாஜ்மகாலையும் தகர்க்கப்போவதாகவும், உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்ஆகியோரைக் கொல்லப் போவதாகவும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டியுள்ளது.
இதையடுத்து இந்த இடங்களுக்கும், தலைவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் தலைவர்ளுக்கும், மதப்பிரச்சனையைக் கிளப்பும் இடங்களுக்கும் அச்சுறுத்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அம் மாநிலத்தின உள்துறை முதன்மைச் செயலாளர் நரேஷ் தயாள் கூறுகையில், இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் பணி நடக்கிறது. விரைவில் ஆட்கள் பிடிபடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications