தமிழகத்தில் இதுவரை 15 தமிழ்த் தீவிரவாதிகள் கைது
சென்னை:
தமிழகத்தில் இதுவரை 15 தமிழ்நாடு மீட்புப் படை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார்கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகுதான் தமிழ்த் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மீண்டும்அதிகரித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்த் தீவிரவாதிகளை வேட்டையாட தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகு தமிழ்தீவிரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இதுவரை 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர்கள் சுந்தரம், மாறன், பொன்னி வளவன், ரேடியோ வெங்கடேசன் ஆகியோர்.இவர்கள் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை 1997ம் ஆண்டு தாக்கிய வழக்கில்சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மீது 470 பக்க குற்றப் பத்திரிக்கை ஜெயம்கொண்டம் மாஜிஸ்திரேட் முன்பு புதன்கிழமை தாக்கல்செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் தனியரசு, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல்களைவழங்கினார்.












Click it and Unblock the Notifications