நாளை இந்தியா வருகிறார் டோனி பிளேர்: டெலிபோனில் புஷ்சுடன் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் நாளை(வெள்ளிக்கிழமை) இந்தியா வரவுள்ளார். அவருடன் இன்று காலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதுகுறித்துடெலிபோனில் பேசினார்.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்று இந்தியா கூறியுள்ளது.மேலும் இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 20 தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியலையும்பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது

இதற்கிடையே எல்லைப் பகுதிகளில் இரு தரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல்,இந்திய-பாகிஸ்தான் படையினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.

இந்தத் துப்பாக்கிச் சண்டை எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் என்ற சூழ்நிலையில், நாளை இந்தியாவுக்கு வரும்டோனி பிளேர், பிரதமர் வாஜ்பாயை சந்திக்கிறார். பிறகு 7ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.

இரு நாட்டு தலைவர்களிடமும் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை குறைக்கபேச்சு வார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. மேலும் இரண்டு நாடுகளும் திரும்பவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஜார்ஜ் புஷ் இன்று காலை டோனி பிளேரை டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தவிர்ப்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். இங்கிலாந்துபிரதமரிடம் சில யோசனைகளையும் புஷ் தெரிவித்தார். இந்த யோசனைகள் குறித்து இந்தியஸ பாகிஸ்தான்தலைவர்களுடன் டோனி பிளேர் பேசுவார்.

இந்தியா வரும் டோனி பிளேர் முதலில் பெங்களூர் வருகிறார். அங்கு நடக்கவுள்ள சாப்ட்வேர் தொடர்பானமாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+