கடன் வழங்கியதில் மோசடி: 2 வங்கி ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கடன் வழங்கியதில் மோசடி செய்ததாக மதுரை ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை வழங்கி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1983ம் ஆண்டு டெக்ஸ்டைல் மில் அதிபர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி கடன்வழங்கியுள்ளது.
அப்படி வழங்கப்பட்ட கடனில் நிறை மோசடி நடந்திருப்பதாக அந்த வங்கியின் மேனேஜர் மற்றும் ஒரு வங்கிஊழியர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசன், மோசடி செய்த இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கிஉத்தரவிட்டார்.
மேலும் வங்கி மேனேஜருக்கு ரூ.40,000 அபராதமும் ஊழியருக்கு ரூ.4,000 அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications