ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு இரவு நேர ரயில்
சென்னை:
ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டிருப்பதால் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்புரயில் போக்குவரத்து நடத்தப்படவுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டநிலையில் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலனை முன்னிட்டு இரவில் ஊட்டி என்ற பெயரில் சிறப்பு ரயிலை இயக்கரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்த ரயில் நீராவி என்ஜினால் இயக்கப்படுவதுதான் சிறப்பு அம்சமாகும். மற்றொரு சிறப்பு அம்சம், இந்த ரயில்சனிக்கிழமை இரவு கிளம்பும்.
பகலில் மட்டுமே இதுவரை ஊட்டிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. முதல் முறையாக இரவில் ரயில்இயக்கப்படவுள்ளது.
பகலில் ஊட்டியின் எழிலை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் இரவில் ஊட்டியின் எழிலை வித்தியாச உணர்வோடுகாணப் போவது குறிப்பிடத்தக்கதாகும்.