ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் பொருள்கள் ஏற்றுமதி
கொச்சி:
ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாகசர்வதேச வியாபாரிகள் ஆலோசகர் தேவராஜன் கூறியுள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே உள்ள நல்லுறவு காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை ஏற்றுமதிசெய்வதற்கு இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மருந்துகள், கம்பளிமற்றும் காட்டன் துணிகள், சால்வைகள், நவநாகரிக ஆடைகள், டீத்தூள், உப்பு, சர்க்கரை, காலணிகள்,ஹேண்ட்பேக், சமையலறைப் பொருட்கள் போன்ற பல பொருட்களை இந்தியா உடனடியாக ஆப்கானிஸ்தானுக்குஏற்றுமதி செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.
இதுப்பற்றி டெல்லியில் உள்ள இந்திய ஏற்றுமதி கழகத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஒருவர் கூறும்போது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடிக்கும் வரை காபூலிலும் நல்ல நவ நாகரீக உடைகளைத்தான்அணிந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் கருப்பு டர்பனைத்தான் கட்ட வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள்விதித்த பிறகு தான் அங்கு ஆடைகள் ஏற்றமதி குறைந்து விட்டது.
ஆப்கானிஸ்தானில் வர்த்தகம் தொடங்குவதற்கு உடனடியாக ஏற்றுமதியாளர்கள் அங்கு அலுவலகம் தொடங்கி,ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
அரசாங்கமும் ஏற்றுமதி செய்வதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications