5ம் வகுப்பு முதல் அரசுத் தேர்வு: கல்வி அதிகாரி விளக்கம்
சென்னை:
10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கையைக்குறைப்பதற்காகவே 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தமிழககல்வித்துறை செயலாளர் சுப்புராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பை அவர் இன்று (திங்கள்கிழமை) துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்களில் 3.5 லட்சம் மாணவ-மாணவியர் தோல்வியைத்தழுவுகின்றனர்.
இதைக் குறைப்பதற்காகவே 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது. இதற்காகமாணவர்கள் பயப்படத் தேவையில்லை.
மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டே இந்த பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படவுள்ளது.
தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில்தான் 95 சதவீத பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறுகின்றனர்.குறைந்த அளவு தேர்ச்சி விகிதம் திருவள்ளூரில் உள்ளது.
மாநில அளவில் நடக்கும் இந்த புத்தொளி பயிற்சி வகுப்புக்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதுஎன்றார் சுப்புராஜ்.












Click it and Unblock the Notifications