மதுரையில் ஈவ் டீசிங்: கல்லூரி மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பெண்களை கேலி செய்த மதுரை யாதவா ஆடவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர்.

மதுரை திருப்பாலையில் யாதவா ஆடவர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் பெரியார்பஸ் நிலையத்திலிருந்து கல்லூரிக்குச் செல்வதற்காக சத்திரப்பட்டி செல்லும் சிட்டி பஸ்சில் பயணம் செய்தனர்.

பஸ்சில் பயணம் செய்த இளம் பெண்களை கேலி செய்தவாறு அவர்கள் பயணித்துள்ளனர். அதே பஸ்சில் உமாஎன்ற பெண் போலீஸும் பயணம் செய்தார்.

மாணவர்களின் சேஷ்டைகள் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்த்த அவர் டிரைவரிடம் சென்று பஸ்சைஎங்கும் நிறுத்தாமல் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

டிரைவரும் இதற்காகவே காத்துக் கொண்டிருந்தார். ஒரு மாணவியின் சிக்னல் கிடைத்தவுடன் பஸ்சை படுவேகமாகஓட்டிச் சென்று தல்லாகுளம் காவல் நிலையத்தில் நிறுத்தினார்.

பின்னர் பயணிகள் உதவியுடன் கலாட்டா செய்த மாணவர்களை போலீஸ்காரர் உமா, இழுத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த செய்தி யாதவா கல்லூரிக்குப் பரவியது. இதையடுத்து மாணவர்கள்சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தவழியாகச் சென்ற பஸ்களை தடுத்து நிறுத்தி கைப்பற்றிக் கொண்டனர்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். தவறு செய்ததால்தான் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழி கூறிய பின் மாணவர்கள் தங்களதுபோராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+