ஊட்டி சாலையில் போக்குவரத்து தொடங்கியது
ஊட்டி:
மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் இரு வழிகளிலும் இலகு ரக வாகனங்கள்அனுமதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவுஏற்பட்டது. மேலும் குறும்பாடி பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. நிலச்சரிவால்பழுதடைந்த பகுதிகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தில் ஊட்டிக்கு வாகனப் போக்குவரத்து துவங்கியது. முதலில்மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ஒரு வழிப்பாதையாக இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
நான்கு நாட்கள் மேற்கொண்ட ஆய்வுப்பணியில் பிரச்சனைகள் இல்லாததால் இன்று முதல் இரு வழிப்பாதையிலும்இலகு ரக வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது.
இந்த போக்குவரத்து வரும் 15ம் தேதி வரை தொடரும். இதன் பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு கனரகவாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications