போலி பாஸ்போர்ட் மூலம் ஷார்ஜா செல்ல முயன்ற இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
போலி பாஸ்போர்ட் மூலம் ஷார்ஜா செல்ல முயன்ற இலங்கை தமிழர் ஒருவரை கோயம்புத்தூரில் போலீசார் கைதுசெய்தனர்.
இலங்கை-திரிகோணமலையைச் சேர்ந்த அரவிந்தன் என்ற அந்த நபர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஷார்ஜாசெல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் விமான நிலைய அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
வேறு ஒருவருடைய பாஸ்போர்ட்டில் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.












Click it and Unblock the Notifications