விழுப்புரம் அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே ஆற்று மணலுக்கு பணம் வசூலித்ததால் ஏற்பட்ட மோதலில் பாமக பிரமுகர் அடித்து கொலைசெய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் காவனிப்பாக்கத்தை சேர்ந்த, கட்டிடம் கட்டும் தொழிலாளி மோகன் (38). இவர் பாமகவிவசாய அணி செயலாளராக உள்ளார்.

காவனிப்பாக்கம் அருகே திருப்பாச்சனூர் ஆற்றில் சிலர் திருட்டுத்தனமாக மணலை லாரியில் கடத்தி வந்தனர்.

அனுமதியில்லாமல் மணல் அள்ளுவதால் கிராமமக்கள் ரூ.50 பணம் பெற்று வந்தனர். இந்த பணத்தில் கிராமத்தில்பிள்ளையார் கோவில் கட்டுவதாக இருந்தனர்.

காவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோகன், குமார், அய்யனார், கணேசன் உட்பட சிலர் இந்த பணத்தை வசூல்செய்தனர். சம்பவத்தன்றும் மோகன் உட்பட சிலர் லாரியில் மணல் ஏற்றி சென்றவர்களிடம் பணம் வசூல் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது ஒரு லாரியில் வந்த ராமதாஸ், அய்யப்பன், ராமமூர்த்தி உட்பட பலர், எங்கள் ஊரில் மணல்அள்ளுவதற்கு எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி இரும்புத் தடியால் மோகன் மற்றும் அய்யனாரைதாக்கியுள்ளனர்.

இதில் மோகன் தலையில் பலத்த அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த அய்யனார் விழுப்புரம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+