இடைத் தேர்தல்: அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுடன் மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி அதுல் ஆனந்த், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தேர்தல்அதிகாரி மோகன்தாஸ், சைதாப்பேட்டை தேர்தல் அதிகாரியான சென்னை மாவட்ட கலெக்டர் அப்துல் சலாம்,மாநகராட்சி ஆணையர் சம்பத் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், வாக்குச் சீட்டு அச்சடிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் அமைப்புஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இவர்களுடன் சாரங்கி ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications