போலீஸ் விசாரித்ததால் வேதனை: நெல்லையில் தாய், மகள் தற்கொலை
திருநெல்வேலி:
விசாரணைக்காக கணவரை போலீசார் அழைத்துச் சென்றதால், நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண் தன் மகளுடன்தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலியை மாவட்டம் மேலப்பாளையம் அருகே மேலநத்தத்தைச் சேர்ந்த டிரைவர் சுடர்மணி (44). இவரதுஅண்ணன் நம்பிரத்னம் திருச்செந்தூர் சிவில் சப்ளை அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவருக்கும் இடையேசொத்து தகராறு இருந்து வந்ததது.
கடந்த சனிக்கிழமை காலை சுடர்மணியின் வீட்டுக்கு வந்த நம்பிரத்னம் அவருடன் சண்டை போட்டுள்ளார்.இதையடுத்து நம்பிரத்னம் அவரது தம்பி மீது போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீசார் சுடர்மணியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் மனமுடைந்து போன அவரது மனைவி ராஜலட்சுமி, அவர்களுது மகள்கள் ரம்யா (15), ப்ரியா (13),இருவர் மீதும், தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீயில் கருகிய ராஜலட்சுமி அதே இடத்தில் பலியானார். பலத்த தீ காயமடைந்த ப்ரியாவும் சாலையில் விழுந்துஇறந்தார். உயிருக்கு போராடிய ப்ரியா அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications