"எந்த இடையூறு வந்தாலும் தமாகா தனித்து இயங்கும்"
சென்னை:
எத்தனை இடையூறு வந்தாலும் தமாகா கற்கோட்டையாகத்தான் இருக்கும் என்று தமாகா துணைத்தலைவர்வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னை மாவட்டம், சேப்பாக்கம் தொகுதி தமாகா கூட்டம் தியாகராஜன் தலைமையில் நடந்தது. அந்தகூட்டத்தில் வினாயகமூர்த்தி பேசியதாவது:
தமாகா ஒரு கற்கோட்டை. அதை யாராலும் உடைக்க முடியாது. ராஜீவ்காந்தியைப் போல சுறுசுறுப்பான தலைவர்நமக்கு கிடைத்து உள்ளார். தமாகாவினருக்கு இளங்கோவன் தனித்தனியாக 3,000 கடிதங்கள் அனுப்பியுள்ளார்.ஆனால் ஒருவர் கூட அதை மதிக்கவில்லை.
தமாகா தனித்தே இயங்கும் என்று தொண்டர்கள் உறுதியோடு உள்ளனர். அந்த உறுதி தொடரும். இனி ஒவ்வொருகூட்டத்துக்கும் வட்டத்தலைவர்கள் குறைந்தது நூறு பேரையாவது அழைத்து வரவேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,
தமாகா எந்த லட்சியத்திற்காக துவக்கப்பட்டது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்காககடுமையாக உழைக்க வேண்டும். தமாகா ஒரு முடிவே இல்லாத கட்சி. குழப்பங்களுக்கு இங்கு இடமில்லை.
எனவே நமது லட்சியத்தை உணர்ந்து, வாசனுக்கு தோள் கொடுத்து, மூப்பனார் கண்ட கனவை நிறைவேற்றவேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications