இந்தியாவை ஆதரிப்பதை நிறுத்துங்கள்: அமெரிக்கா மீது பாகிஸ்தான் கோபம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்றுஅமெரிக்காவை பாகிஸ்தான் கோபத்துடன் கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது முஷாரப் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுநேற்றுதான் அமெரிக்க அதிபர் புஷ் காட்டமாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரைத் தொலைபேசியில் அழைத்த முஷாரப், நீங்கள் எப்படிஇந்தியாவுக்கு ஆதரவாகப் பேசலாம் என்று கோபமாகப் பேசியுள்ளார்.
புதிதாக வேறு எதுவும் சம்பவம் நடக்கும் அளவுக்கு இந்தியா காத்துக் கொண்டிருக்காது என்று அமெரிக்காகூறியதையும் முஷாரப் கண்டித்துப் பேசியுள்ளார்.
அப்போது கூட காஷ்மீரில் நடப்பது தீவிரவாதம் அல்ல என்றும் சில அமைப்பினர் அங்கு விடுதலைக்காகப்போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் திமிராகக் கூறியுள்ளார் முஷாரப்.












Click it and Unblock the Notifications