ஆப்கானிஸ்தானில் டோனி பிளேர்
காபூல்:
பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்ட இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்,இன்று (செவ்வாய்க்கிழமை) ஆப்கானிஸ்தான் போய்ச் சேர்ந்தார்.
தெற்காசியப் பயணத்தை மேற்கொண்ட பிளேர், திடீரென்று ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகுவரும் முதலாவது மேற்கத்தியத் தலைவர் பிளேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து படையினரும் தலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தற்போதும் இங்கிலாந்தின் 500க்கும் மேற்பட்ட அமைதிப் படையினர் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு ஸ்திரமான அரசை ஏற்படுத்தும் வரை இங்கிலாந்து அந்நாட்டுக்குத் தொடர்ந்துஉதவும் என்று பிளேர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே அமெரிக்க எம்.பிக்கள் பலர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications