வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை
டெல்லி:
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு விரைவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு எல்.எம்.சிங்வி தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
வெளிநாட்டு இந்தியர்களின் நிலை பற்றி ஆய்வு செய்த குழு சமீபத்தில் தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இக்குழுவின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, வெளிநாட்டு இந்தியர்களுக்கு விரைவில் இரட்டைக் குடியுரிமைவழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த இரட்டை குடியுரிமை வசதிவழங்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 10வெளிநாட்டு இந்தியர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications