பாகிஸ்தான் தலைவர்களும் வெளிநாடு பயணம்
இஸ்லாமாபாத்:
எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருவதையடுத்து, பாகிஸ்தானும் தன்னுடைய நிலைக்கு ஆதரவு கோரிவெளிநாடுகளுக்கு சில தலைவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி அமெரிக்காவுக்குப் பயணம்மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானும் தன்னுடைய தலைவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகபாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமது கான் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் நாட்டின் நிலை பற்றியும் எல்லையில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்தும்வெளிநாட்டுத் தலைவர்களுடன் பாகிஸ்தான் தலைவர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களான பேநசீர் புட்டோவும் நவாஸ் ஷெரீப்பும் தற்போதுபாகிஸ்தானில் இல்லை.
ஆனாலும் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் சிறிய அரசியல் கட்சித் தலைவர்களையே வெளிநாடுகளுக்குஅதிபர் பர்வேஸ் முஷாரப் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ ஆட்சியை நடத்தி வரும் பாகிஸ்தான் அரசு, அரசியல் தலைவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவிருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications