கோவையில் குண்டு வெடித்து குப்பை அள்ளும் பெண் காயம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இன்று (வியாழக்கிழமை) காலை குப்பையில் கிடந்த டெட்டனேட்டர் வகை குண்டு வெடித்ததில்ஒரு பெண் படுகாயமடைந்தார்.
சாலைகளில் கிடக்கும் பழைய பேப்பர்களையும் குப்பைகளையும் சேகரிக்கும் 38 வயதான பெண் ஒருவர்,நஞ்சுண்டபுரத்தில் உள்ள தன் வீட்டின் அருகே தேவையில்லாத பொருள்களை எரித்துக் கொண்டிருந்தார்.
எரிந்து கொண்டிருக்கும் பொருட்களுடன் ஒரு சிறிய மெட்டல் கன்டெய்னரையும் அந்தப் பெண் எறிந்துள்ளார்.
அப்போது அந்தக் கன்டெய்னர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அந்தப் பெண் பலத்தகாயமடைந்தார்.
உடனடியாக அந்தப் பெண் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குப்பையோடு குப்பையாகக் கிடந்த டெட்டனேட்டர் வெடிகுண்டைத்தான் அந்தப் பெண் எடுத்து வந்து விட்டார்என்றும் அதை எறிந்தபோது வெடித்து விட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications