ராஜ்யசபா எம்.பியாக மைத்ரேயன் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை:
அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வி. மைத்ரேயன் ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று இன்று(வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
தமாகா தலைவர் மூப்பனார் மறைவையடுத்து காலியான இந்த எம்.பி. சீட்டுக்கு வரும் 17ம் தேதி தேர்தல் நடக்கஇருந்தது.
தந்தையின் இந்த எம்.பி. சீட்டைத் தானே தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்த தற்போதையதமாகா தலைவர் ஜி.கே. வாசன் எண்ணத்தில் மண் விழுந்தது.
தமிழகத்தில் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவே இந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று ஜெயலலிதாஅறிவித்த பிறகு, தன் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வாசன்.
இந்த எம்.பி. சீட்டுக்காக அதிமுகவின் மைத்ரேயனைத் தவிர யாரும் போட்டியிடவில்லை.
மைத்ரேயனைத் தவிர டாக்டர் பத்மராஜன் என்பவர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் டெபாசிட்கட்டவில்லை. அவர் பெயரை யாரும் முன் மொழியவும் இல்லை. இதனால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மைத்ரேயனே போட்டியின்றி ராஜ்யசபா எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, மைத்ரேயன் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டசபைச்செயலாளரும் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியுமான வி. ராஜாராமன் அறிவித்தார்.
முன்பு பாஜகவில் இருந்த டாக்டர் மைத்ரேயன் ஒரு புற்றுநோய் மருத்துவர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்புதான் அவர் அதிமுகவில் சேர்ந்தார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்மைத்ரேயன்.












Click it and Unblock the Notifications