வெளிநாடு செல்லும் எம்.பிக்கள் குழுவில் இடம்பெற காங். மறுப்பு
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச்செல்லும் எம்.பிக்களின் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது.
மொத்தம் 40 எம்.பிக்கள் 10 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்வார்கள் என்றும்அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையில் ஒரு குழுவினர் 2 நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றுஇந்தியாவின் நிலையை எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பிக்கள் குழுவில் இடம்பெற மாட்டோம் என்று காங்கிரஸ்அறிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து முக்கிய எதிர்க் கட்சியான எங்களுடன் மத்திய அரசுகலந்தாலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கைகளில் செய்தி வந்த பிறகே குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் இந்தத் தகவல் தெரியவந்தது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் மன்மோகன் சிங், நஜ்மா ஹெப்துல்லா மற்றும் பி.எம். சயீத் ஆகியோர்தான் காங்கிரஸ்சார்பாக வெளிநாடு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள்.
இதையடுத்து காங்கிரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன்இறங்கியுள்ளார்.