பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ. பயிற்சி மையங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. ஏஜென்டுகள் பயிற்சி அளித்து வருகிறார்கள்என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எஸ். பத்மநாபன் கூறினார்.

டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் பேசிய அவர், எந்தெந்த இடங்களில் எல்லாம் ஐ.எஸ்.ஐ.பயிற்சி முகாம்கள் உள்ளன என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் பத்மநாபன் கூறினார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இவர்களும் இப்பகுதிக்குள் ஊடுருவி, அந்தத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சிஅளித்து வருகிறார்கள் என்றும் பத்மநாபன் தெரிவித்தார்.

இங்குள்ள தீவிரவாத முகாம்களை 2 வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை முகாம்களை லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-தொய்பா அமைப்புகளைச் சேர்ந்ததீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள். இவர்களை எளிதாகச் சென்று தாக்கி அழித்துவிடலாம்.

மற்றொரு வகை முகாம்கள் இந்தத் தீவிரவாதிகளை வளர்த்து வரும் ஐ.எஸ்.ஐயின் பிரம்மாண்டமானமுகாம்களாகும். இவர்களைச் சென்றடைவது கொஞ்சம் கடினம்தான்.

இவர்களுடன் செசன்யா மற்றும் லிபியாவைச் சேர்ந்தவர்களும் இந்த முகாம்களில் உள்ளனர் என்றும் கூறினார்பத்மநாபன்.

ஆனால் அத்தனை தீவிரவாத முகாம்களையும் தகர்க்கக் கூடிய திறமை நம் ராணுவத்தினருக்கு உண்டு என்றுஉறுதியான குரலில் பத்மநாபன் அடித்துக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+