பாகிஸ்தான் விமான தளங்களை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தான் போருக்காக 4 பாகிஸ்தான் விமானத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்கவிமானங்கள் அங்கிருந்து வெளியேறுகின்றன.
எல்லைப் பகுதிகளில் 2 நாடுகளும் படைகளைக் குவித்திருப்பதால் அங்கு நிலவி வரும் பதற்றம்மோசமடைந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்காவுக்குக் கொடுத்த விமானத் தளங்களைத் திரும்பக் கேட்கத் தொடங்கியது பாகிஸ்தான்.
அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டிருந்த 4 விமானத் தளங்களில் இரண்டையாவது திரும்பக் கொடுங்கள் என்றுபாகிஸ்தான் கேட்டது.
ஆனால் 4 தளங்களையுமே நாங்கள் காலி செய்கிறோம் என்று அமெரிக்கா கூறிவிட்டது.
இதற்கிடையே கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களையும் வான் பகுதியையும்பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வாங்கியுள்ளதால், பாகிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் அங்கு நகரஆரம்பித்துள்ளன.
மேலும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறும் மற்றொரு அமெரிக்கக் குழுவினர் ஆப்கானிஸ்தானின் காண்டஹாரில்முகாமிடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications