ராஜஸ்தான் ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து
பீகானீர்:
ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகிவிட்டனர்.
வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 150 ராணுவ டிரக்குகள் அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.
பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பாட்டின்டாவுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்காக இந்த டிரக்குகள்தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தபோதுதான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் ஒரு சிறு ஏவுகணை 10 அடி தூரம் சென்று தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில்சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
ஆனாலும் ஒரு டிரக்கில் உள்ள வெடிபொருட்கள் மட்டுமே தீயில் மாட்டிக் கொண்டன என்று பாதுகாப்புத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இந்த இடத்தை நேரில் சென்று இன்று பார்வையிடுகிறார்.












Click it and Unblock the Notifications