இலங்கையில் விரைவில் நிரந்தரப் போர் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் விரைவில் நிரந்தரப் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்வார்கள் என்றுதெரிகிறது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ள நார்வே குழுவினர் கடந்த 2 நாட்களாகஇலங்கைத் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டனர்.

முன்னதாக இலங்கை கிளம்புவதற்கு முன்னதாகவே லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கத்தையும் நார்வே குழுவினர் சந்தித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க் கட்சித் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லீம்கட்சித் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து விரிவான பேச்சு நடத்தியுள்ளனர் நார்வே குழுவினர்.

போர்ப் பகுதிகளில் அனைத்து இன மக்களும் தங்குதடையின்றி சென்று வருவது குறித்தும் போர்நிறுத்தம் குறித்தும்விவாதிக்கப்பட்டதாக நார்வே குழுவின் தலைவரும் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சருமான விடார்ஹெல்கெசன் கூறினார்.

விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் இந்த இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்தைத்தான்விரும்புகின்றன என்று கூறிய ஹெல்கெசன், அரசியல் ரீதியான தீர்வு இப்போது நிச்சயம் கிடைக்கும் என்றும் இருதரப்பினரும் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து படிப்படியாக பேச்சுவார்த்தை வெற்றியடைந்து வருவதாகவும் ஹெல்கெசன் கூறினார்.

இந்த 2 நாட்களிலும் நடந்த பேச்சுக்களின் முடிவு என்ன என்பது தற்போது தெரியாவிட்டாலும், நிரந்தரப்போர்நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 60,000 உயிர்கள் இரு தரப்பிலும் பலியாகியிருப்பால் மனிதாபிமானஅடிப்படையில் இந்தப் போர்நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+