இலங்கையில் விரைவில் நிரந்தரப் போர் நிறுத்தம்
கொழும்பு:
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் விரைவில் நிரந்தரப் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்வார்கள் என்றுதெரிகிறது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக இலங்கை கிளம்புவதற்கு முன்னதாகவே லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கத்தையும் நார்வே குழுவினர் சந்தித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க் கட்சித் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லீம்கட்சித் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து விரிவான பேச்சு நடத்தியுள்ளனர் நார்வே குழுவினர்.
போர்ப் பகுதிகளில் அனைத்து இன மக்களும் தங்குதடையின்றி சென்று வருவது குறித்தும் போர்நிறுத்தம் குறித்தும்விவாதிக்கப்பட்டதாக நார்வே குழுவின் தலைவரும் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சருமான விடார்ஹெல்கெசன் கூறினார்.
விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் இந்த இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்தைத்தான்விரும்புகின்றன என்று கூறிய ஹெல்கெசன், அரசியல் ரீதியான தீர்வு இப்போது நிச்சயம் கிடைக்கும் என்றும் இருதரப்பினரும் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து படிப்படியாக பேச்சுவார்த்தை வெற்றியடைந்து வருவதாகவும் ஹெல்கெசன் கூறினார்.
இந்த 2 நாட்களிலும் நடந்த பேச்சுக்களின் முடிவு என்ன என்பது தற்போது தெரியாவிட்டாலும், நிரந்தரப்போர்நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 60,000 உயிர்கள் இரு தரப்பிலும் பலியாகியிருப்பால் மனிதாபிமானஅடிப்படையில் இந்தப் போர்நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications