இந்திய வானில் மீண்டும் பறந்த பாகிஸ்தான் உளவு விமானம்
ஜம்மு:
பாகிஸ்தானின் ஆளற்ற உளவு விமானம் ஒன்று இந்திய வான்பகுதியில் பறந்தது.
பின்னர் 2 வட்டம் அடித்துவிட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கே அந்த விமானம் சென்று விட்டது.
அந்த ஆளற்ற விமானம் மிக உயரத்தில் பறந்ததால் இந்திய ராணுவத்தினரால் அதைத் தாக்க முடியவில்லை.
எல்லையில் பதற்றம் மிகுந்துள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானின் ஆளற்ற உளவு விமானம் இந்திய வான் பகுதிக்குள்ஊடுருவியிருப்பது கடந்த ஒரு வாரத்தில் இது 3வது முறையாகும்.
கடந்த 5ம் தேதி 2 பாகிஸ்தான் உளவு விமானங்கள் பூஞ்ச் பகுதியில் பறந்தன. இவற்றில் ஒன்றை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். மற்றொன்று தப்பிவிட்டது.
இதையடுத்து கடந்த 9ம் தேதி ராம்கார் பகுதியில் மற்றொரு பாகிஸ்தானின் ஆளற்ற உளவு விமானம் ராம்கார்பகுதியில் பறந்தது. ஆனால் இவ்விமானம் மிக அதிக உயரத்தில் பறந்ததால் இந்திய ராணுவத்தினரின் விமானஎதிர்ப்பு பீரங்கிகளிடமிருந்து தப்பிவிட்டது.