For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

11 தமிழக மீனவர்கள் மாலத்தீவு சிறையில் அடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், இந்திய கடற்பகுதியைத் தாண்டி மீன் பிடித்ததால் மாலத்தீவுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த வின்சென்ட் மகன் ஆல்பர்ட். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரதுமகன் பிதாலியேஸ் (52), சின்னத்துறை கிளீட்டஸ் (36), பிராங்ளின் (28), சுனில் (21), ராஜேஸ் (21), வின்சென்ட்(18), பூத்துறை கூக்லின் (21), சூசை நாயகம் (19), எலியாஸ் (24), அந்தோணியார் பிச்சை (39), ஜான் நாயகம் (18)ஆகிய 11 மீனவர்கள் மீன் பிடிக்க லட்சத்தீவு பகுதிக்கு சென்றனர்.

அவர்கள் லட்சத்தீவு அருகே மினிகாய் என்ற தீவின் அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போதுமாலத்தீவு கடற்படையினர் அந்த மீனவர்களையும், விசைப்படகையும் பிடித்துச் சென்றனர்.

இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களை மாலத்தீவுச் சிறையில் அடைத்தனர்.தகவல் கிடைத்ததும் ஆல்பர்ட் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் மீன்பிடி தொழிலாளர் சங்க முக்கிய காரியதசி வின்சென்ட் ஜெயன், பிரதமர், ஜனாதிபதி, தமிழக முதல்வர்,மீன்வளத்துறை அமைச்சர், குமரி மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோருக்கு தகவல்கொடுத்துள்ளனர்.

மாலத்தீவில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X