கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை மீட்க உதவிய 9 வயது சிறுவன்
சென்னை:
தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்ற ஊரில் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்ற உதவி செய்த9 வயதே ஆன சிறுவன் ஊராரின் பாராட்டைப் பெற்றான்.
மகேந்திர மங்கலம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்தவன் வேல்முருகன் (9). இவன் ஒரு பள்ளியில் 4வது வகுப்புபடித்து வருகிறான்.
தன் அண்ணன் பெருமாளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் வேல்முருகன்.
அப்போது சாலையோரக் கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண், தண்ணீர்இறைப்பதற்காக வாளியைக் கிணற்றில் இறக்கியபோது தடுமாறி உள்ளே விழுந்து விட்டார்.
ராஜேஸ்வரியின் கூக்குரலைக் கேட்ட வேல்முருகன் உடனடியாக எதையுமே யோசிக்காமல் "படக்" என்று கிணற்றில்குதித்தான். உள்ளே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை மேலே இழுக்க முயற்சி செய்தான்.
இதற்கிடையே பெருமாள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் சொல்லி அவர்களை அழைத்து வந்தான்.
அவர்களில் சிலர் உடனடியாகக் கிணற்றில் குதித்து ராஜேஸ்வரியையும், வேல்முருகனையும் மீட்டு மேலேகொண்டு வந்தனர்.
காப்பாற்ற முடியாது என்று தெரிந்தும் கூட காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வில் கிணற்றுக்குள் குதித்தவேல்முருகனை ஊரே புகழ்ந்து தள்ளியது.












Click it and Unblock the Notifications