தர்மபுரி அருகே 3 நக்சலைட்டுகள் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே 3 நக்சலைட்டுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே போன ஆண்டு நக்சலைட்டுகள் தலைவன் ரவீந்திரனை போலீசார் சுட்டு கொன்றனர். அதற்கு பிறகுசிலர் தர்மபுரியில் உள்ள பென்னாகரம் அருகே நீதிமன்றத்தின் அனுமதியோடு ரவீந்திரனுக்கு சிலை வைத்தனர்.
அப்போதிலிருந்தே தர்மபுரியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டுநக்சலைட்டுகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனப்பள்ளி அருகே 3 நக்சலைட்டுகள் கையில் துப்பாக்கியுடன்வந்து ஒரு போலீஸ்காரரை மிரட்டி விட்டு சென்றனர்.
அந்த போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர வேட்டையில் இறங்கி 3நக்சலைட்டுகளையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications