For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதச்சார்பற்ற 3வது அணி அமைப்போம்: இளங்கோவன் உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதச்சார்பற்ற 3வது அணி அமைப்போம் என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்கூறியுள்ளார்.

இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 8 மாத கால அதிமுக ஆட்சி பிடிக்காமல், அதன் கூட்டணிக் கட்சிகள் வெளியேறியுள்ளது வரவேற்கத்தக்கது.

தமாகாவும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது பாராட்டத்தக்கது. இது குறித்து தமாகா தலைவர்வாசனுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரை காங்கிரஸில் இணையுமாறு கேட்டுக்கொண்டேன்.

இடைத்தேர்தலில் 8 மாத அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்வோம்.

மேலும் 25 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டதால் தமிழகம் பின்னடைந்திருப்பதை எடுத்துக்கூறுவோம் என்று இளங்கோவன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X