For Daily Alerts
Just In
மதச்சார்பற்ற 3வது அணி அமைப்போம்: இளங்கோவன் உறுதி
சென்னை:
மதச்சார்பற்ற 3வது அணி அமைப்போம் என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்கூறியுள்ளார்.
இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 8 மாத கால அதிமுக ஆட்சி பிடிக்காமல், அதன் கூட்டணிக் கட்சிகள் வெளியேறியுள்ளது வரவேற்கத்தக்கது.
தமாகாவும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது பாராட்டத்தக்கது. இது குறித்து தமாகா தலைவர்வாசனுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரை காங்கிரஸில் இணையுமாறு கேட்டுக்கொண்டேன்.
இடைத்தேர்தலில் 8 மாத அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்வோம்.
மேலும் 25 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டதால் தமிழகம் பின்னடைந்திருப்பதை எடுத்துக்கூறுவோம் என்று இளங்கோவன் கூறினார்.
Story first published: Sunday, January 13, 2002, 5:30 [IST]