சென்னை திரும்பினார் ஜெ.
சென்னை:
ஹைதராபாத்தில் ஒரு மாதம் ஓய்வெடுத்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (சனிக்கிழமை)சென்னை திரும்பினார்.
ஜெயலலிதா தன் தோழி சசிகலாவுடன் டிசம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்குச்சென்றார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
இடையில் கடந்த டிசம்பர் 27ம் தேதி நிலக்கரி ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட போது சென்னைக்கு வந்தஜெயலலிதா, தான் விடுதலையான தீர்ப்பைக் கேட்டு மகிழ்ந்து, உடனே ஹைதராபாத் திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பினார் ஜெயலலிதா. விமான தளத்தின் ஓடுதளம்அருகே கொண்டு செல்லப்பட்ட காரில் ஏறி நேராக போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதா புறப்பட்டு சென்றார்.
ஜெயலலிதாவிடம் பேட்டி காண்பதற்காக விமான நிலைய வாசலில் நிருபர்கள் குவிந்து இருந்தனர். ஆனால்ஜெயலலிதா பேட்டி அளிக்கவில்லை. நிருபர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொண்டே காரில் சென்றுவிட்டார்.
வரும் இடைத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்தும் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள்குறித்தும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெயலலிதா அறிவிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications