ராமேஸ்வரத்தில் 65 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் உள்ள மீனவக்குப்பத்தில் தீப்பிடித்ததால் 65 குடிசைகள் எரிந்து, ரூ.20 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதடைந்தன.
ராமேஸ்வரம் அருகே ஏர்க்கோடு மீன் பிடித் துறைமுகத்தில் திடீரென்று ஒரு குடிசையில் தீப்பிடித்தது. காற்றுபலமாக வீசியதால் தீ படிப்படியாக அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது.
உடனே ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும்பணியில் இறங்கியது. 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 65 குடிசைகளும் தீயில் கருகி சாம்பலாகின. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை. ஆனால்குடிசைகளில் வைத்திருந்த மீன்பிடிக்கும் வலைகள், விசைப் படகுக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும்தீயில் கருகின.
இதனால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன. இந்த பகுதியை தொழிலாளர் துறைஅமைச்சர் அன்வர் ராஜாநேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.2,000 பணம்வழங்க உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களும், சமையல் பொருட்களும் வழங்கினர். ராமேஸ்வரம்போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications