வாஜ்பாய், முஷாரப்பிடம் புஷ் தொலைபேசியில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஷாரப்பின் தொலைக்காட்சிக்குப் பிறகு ஓரளவு எல்லைப் பதற்றம் குறைந்துள்ளது என்று கூறியுள்ள புஷ், இருநாடுகளும் இப்படியே அமைதியைக் கடைப்பிடியுங்கள் என்றும் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் மதவாதிகளின் தீவிரவாதச் செயல்களை முடக்க உத்தரவிட்டதற்காக முஷாரப்புக்குபுஷ் நன்றி கூறினார்.
வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக வாஷிங்டனிலிருந்து கேம்ப் டேவிட் செல்வதுபுஷ்ஷின் வழக்கம்.
ஆனால் தற்போது முஷாரப்பின் தொலைக்காட்சி உரையை முன்னிட்டும் அதற்கு இந்தியாவின் நிலையைஅறிவதற்காகவும் அவர் இந்த முறை வாஷிங்டனை விட்டு எங்கேயும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications