இன்டர்நெட் ஆபாசப் படத்தில் நடித்த தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாசப் படத்தில் இருந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம்அளித்தார்.
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் பல பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதால்,போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரது ஆபாசப்படத்தில் நடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி அளித்தவாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
பிரகாஷ் எனக்கு நண்பர். ஒரு நாள் அவரிடம் நான் ஒரே நாளில் ஐந்து பெண்களிடம் உல்லாசமாக இருப்பேன்என்று சொன்னேன். இதையடுத்து என்னை ஒரு நாள் கடற்கரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மூன்று பெண்களைக் காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி சொன்னார். நானும் பெண்களுடன்உல்லாசமாக இருந்தேன். அதை டாக்டர் படம் பிடித்து வைத்துக் கொண்டார். இதை வெளியில் காட்ட மாட்டேன்என்று சொன்னார்.
ஆனால் இன்டர்நெட்டில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார் என்று தொழிலதிபர் கூறியுள்ளார்.
இதுபோல் ஆண், பெண் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
சில நாட்களில் அவர்களும் நீதிமன்றங்களில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பர் என்று போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications