காஷ்மீரில் 2 ஹாலந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தில் 2 ஹாலந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்போது அவர்கள் மீது 2 தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். எல்லைப் பாதுகாப்புப் படையினரைக்கத்தியால் குத்திவிட்டு அவர்களுடைய துப்பாக்கிகளைக் கைப்பற்றவும் அந்தத் தீவிரவாதிகள் முயற்சித்துள்ளனர்.
ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த 2தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அந்த 2 பேரும் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது.
எல் பாகியோவ்லி அகமது மற்றும் எல் ஹாஸ்நோவி காலிக் ஆகிய இந்த 2 பேரும் கடந்த டிசம்பர் 26ம் தேதிஆம்ஸ்டர்டாமிலிருந்து அம்மான் வழியாக டெல்லி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து சில கிரெடிட் கார்டுகளும், 2 செல் போன்களும், ஒரு திசை காட்டும் கருவியும், வேறு சிலஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications