டான்சி வழக்கு: அப்பீல் மீது வரும் 18ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவின் மீது வரும் 18ம் தேதி விசாரணக்கு வருகிறது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட அனைவரையும் கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னைஉயர் நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்தது.
இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடை விலகியது. அதனால் அவரும் ஆண்டிப்பட்டிதொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ். பாரதி என்பவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இவர் தான் டான்சி வழக்கின் முதல் புகார்தாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் டான்சி வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில் பாரதியால் மேல் முறையீடு செய்யப்பட்ட டான்சி நில பேர ஊழல் வழக்கு வரும் 18ம் தேதிவிசாரணைக்கு வருகிறது.
அப்போதுதான் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா, அல்லது தள்ளுபடி செய்யுமாஎன்று அறிவிக்கப்படும்.
சுப்பிரமணியம் சுவாமியின் மனு 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications