அரசியலில் குதித்தார் ப. சிதம்பரத்தின் மகன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக் கட்சியின் தலைவருமான ப. சிதம்பரத்தின் மகன்கார்த்திக் சிதம்பரம் மதுரையில் இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் கொடியை ஏற்றியதன் வாயிலாகஅரசியலுக்குள் புகுந்துள்ளார்.

சிதம்பரம் தமாகாவிலிருந்து பிரிந்து வந்து தனியாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைத் தொடங்கினார். சிலநாட்களுக்கு முன்பு தனது கட்சிக்கு புதிய கொடி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரமும் அரசியல் களத்தில் குதித்து விட்டார். மதுரைக்கு வந்தகார்த்திக்குக்கு விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் மதுரையில் உள்ள வில்லாபுரம், மதிச்சியம் உள்பட 4 இடங்களில் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து கார்த்திக் பேசினார்.

சுய மரியாதை, நேர்மையான ஆட்சி மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைத்தான் இந்தக் கொடியில் உள்ள 3நட்சத்திரங்களும் சுட்டிக் காட்டுகின்றன என்று கூட்டத்தில் பேசிய கார்த்திக், கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும்கடுமையாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர் தன்னுடைய சொந்த ஊரான சிவகங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+