புலிகளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை: இந்தியா
டெல்லி:
தங்களுக்கும் நார்வே குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை சென்னை அல்லது பெங்களூரில்வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி விடுதலைப்புலிகளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லைஎன்று மத்திய அரசு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளரான பாலசிங்கத்தின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,பேச்சுவார்த்தையை தென் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு நகரில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றுபுலிகள் கோரியிருப்பதாகத் தகவல்கள் வந்தன.
இந்திய அரசுக்கு இதுகுறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக பாலசிங்கமும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சிகளும் கூக்குரலிட்டு வந்தன.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு இதுகுறித்துக்கடிதமும் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் புலிகளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் பேச்சு நடத்த வேண்டும் என நார்வே மற்றும் இலங்கை அரசுகள் மூலமாக புலிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்திய அரசுக்கு அவர்கள் நேரடியாகக் கடிதம் எழுதவில்லை என்று தெரிகிறது.