எல்லாம் பாக். கையில்தான் உள்ளது: பாவல் திடீர் பல்டி
டெல்லி:
பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே திரும்பவும்பேச்சுவார்த்தை நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் இன்று(வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூறினார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரைச் சந்தித்துப்பேசிய பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் நிருபர்களிடம் பேசியபோதுதான் பாவல்இவ்வாறு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கான சரியான பாதையை நோக்கித்தான் இரு நாடுகளும் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால்பாகிஸ்தான் அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அந்தப் பாதையில் தொடர்ந்து செல்ல முடியும்என்றும் பாவல் கூறினார்.
இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு தற்போது உங்கள் (நிருபர்கள்) முன்னால் நான் தெம்பாக நின்றுபேச முடிகிறது. இந்தப் பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்றும் பாவல் நம்பிக்கை தெரிவித்தார்.
நிருபர்கள் கூட்டத்தில் பேசிய ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளில் 14 பேர்இந்தியர்கள்தான் என்றார்.
இவர்கள் அனைவரும் கராச்சியில் உள்ள மலைக் குகைகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகப் பாகிஸ்தான் கூறுகிறது.ஆனால் கராச்சியில் குகைகளே இல்லை என்பது எல்லோருக்கும், ஏன், பாகிஸ்தானுக்கும் கூடத் தெரியும் என்றும்சிங் கிண்டலாகக் கூறினார்.
அந்த 20 தீவிரவாதிகள் குறித்து பாவல் கூறியபோது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முஷாரப் மறுப்புஏதும் கூறவில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் பாவல் இன்று சந்தித்து இந்திய-பாகிஸ்தான் நிலவரம் குறித்துப்பேசினார்.












Click it and Unblock the Notifications