For Daily Alerts
Just In
ஊட்டி, கோவை, நெல்லையில் பாஸ்போர்ட் மையங்கள் துவக்கம்
சென்னை:
திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை ரீதியான பாஸ்போர்ட் மையங்கள்இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.
நீலகிரி மாவட்டத் தலைநகர் ஊட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு பாஸ்போர்ட் மையத்தைத்தொடங்கி வைத்தார்.
அதேபோல் திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் மையங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன.
விரைவில் பிற மாவட்டங்களுக்கும் இந்த பாஸ்போர்ட் மையங்கள் விரிவு படுத்தப்படவுள்ளன.
தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரு இடங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள்உள்ளன.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால்மாவட்ட தலைநகரங்களில் பாஸ்போர்ட் மையங்களை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, January 18, 2002, 5:30 [IST]