கல்லூரி மாணவிகளைக் கிண்டல் செய்த மாணவர்களுக்கு "தர்ம அடி"
விருதுநகர்:
டவுன் பஸ்ஸில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த மாணவர்களை கிராமத்து மக்கள் திரண்டு வந்து தர்ம அடிகொடுத்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது நல்லமநாயக்கன் பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர்விருதுநகரில் உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கிறார்கள். இதற்காக தினமும் நல்லமநாயக்கன் பட்டியிலிருந்து டவுன்பஸ்ஸில் விருதுநகர் வருவது வழக்கம்.
தினசரி அவர்கள் பஸ்சில் பயணம் செய்யும்போது விருதுநகரில் உள்ள ஆடவர் கல்லூரி மாணவர்கள் இந்தமாணவிகளை மட்டுமல்லாது, பஸ்சில் பயணம் செய்யும் பிற மாணவிகளையும் கிண்டல் செய்வது வழக்கமாம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாணவிகள் பொங்கி எழுந்தனர். தங்களது கிராமத்தில் உள்ள பெரியவர்களிடம்இதுகுறித்துக் கூறினார்கள். மாணவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க முடிவு செய்த கிராமத்து ஆண்கள்,வியாழக்கிழமை காலை திருமங்கலத்திலிருந்து விருதுநகர் சென்று கொண்டிருந்த பஸ்சை நல்லமநாயக்கன் பட்டிஅருகே நிறுத்தினர்.
பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் அதிலிருந்த கல்லூரி மாணவர்களை சரமாரியாகத் தாக்கினர். பஸ்சுக்குள் இருந்தபொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசாருக்குத் தகவல் போனது.
அவர்கள் விரைந்து வருவதற்குள் கிராமத்தினர் அங்கிருந்து தப்பி விட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துதலைமறைவான கிராமத்தினரைத் தேடி வருகின்றனர்.