கடவுளுக்கு குடும்பம் இருக்கிறதா? கருணாநிதி கேள்வி
சென்னை:
கடவுளுக்கு குடும்பம் இருப்பதாகச் சொல்வது கடவுளையே இழிவுபடுத்தும் செயல் என திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
1960களில் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை பெரியார், அண்ணாவுடன் சேர்ந்து மிகத் தீவிரமாகப் பரப்பியவர்கருணாநிதி.அக் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் அந்தக் கருத்துக்களில் எல்லாம் கவனம் செலுத்துவதைக் குறைத்துக் கொண்டது.
ஆனால், சமீபகாலமாக மீண்டும் கடவுள் எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார் கருணாநிதி. சில வாரங்களுக்கு முன்விபூதி பூசுபவன் முட்டாள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய கருணாநிதி இப்போது மீண்டும் அதேபோன்ற ஒருகருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாத்திகம் ராமசாமியின் குடும்பத் திருமண விழாவில் பேசிய கருணாநிதி,
கடவுளுக்குத் திருமணமாகி குடும்பம் இருப்பதாக கற்பிப்பதும், அவருக்கு உணவு படைப்பதும் கடவுளையேஇழிவுபடுத்தும் செயலாகும். தமிழ்நாட்டில் நாத்திகன் என்று கூறினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். நான்நாத்திகன் தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பது தான் திமுகவின் கொள்கை என்றார்.
விபூதி விஷயத்தில் கருணாநிதியின் பேச்சுக்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவிலேயே கடும் எதிர்ப்புக்கிளம்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications