மதுரை தெப்பக் குளத்தில் நிரந்தர படகு சவாரி
மதுரை:
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் வைகை ஆற்று நீர் நிரப்பப்பட்டு அங்கு உல்லாச படகு சவாரிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மதுரையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தெப்பத் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து வண்டியூர் மாரியம்மன்கோவில் தெப்பக்குளத்தில் வைகை ஆற்றிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு மிக ஜோராக காணப்படும் தெப்பக்குளத்தில் படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த படகு சவாரியை மாவட்ட ஆட்சியர் சேது ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் பெரியவர்களுக்கு தலைக்கு ரூ. 10ம்,சிறியவர்களுக்கு ரூ. 5ம் வசூலிக்கப்படும்.
தெப்பத் திருவிழாவுக்குப் பிறகும் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும், தெப்பக்குளத்தின்மையத்தில் உள்ள மண்டபத்தை நவீனப்படுத்தி, சுற்றுலா மையமாக மாற்றப்படும் என்றும் ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications